கோவை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவை மாநகர் துடியலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீதுவபோக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கோவை மாநகர் துடியலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளாராக (SSI) பணியாற்றி வருபவர் துரைராஜ்(55). இவர் ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு 19 மற்றும் 17 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் படிப்பை பாதியில் நிறுத்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் பலமுறை அந்த பெண் வீட்டில் இல்லாத போது துரைராஜ் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இந்நிலையில் நான்கு தினங்களுக்கு முன் அச்சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதனால் அப்பெண் சிறுமிகளை காணவில்லை என புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போலிசார் அச்சிறுமிகள் இருந்த இடத்தை கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் துரைராஜ் செய்த பாலியல் துன்புறுத்தல்களை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து துரைராஜ் மீது போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்கு செய்து துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...