வால்பாறையில் 5 கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

கிணத்துக்கடவு பகுதியில் இருந்து சுற்றுலா வந்து நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கும் பொழுது ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.


கோவை: வால்பாறையில் சுற்றுலா வந்து உயிரிழந்த மாணவர்களின் விவகாரத்தையடுத்து, அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்தினார். இதில், அனைத்து துறை அதிகாரிகளும், 21 வார்டு உறுப்பினர்களும், பொது மக்களும் கலந்து விபத்தை தடுக்க பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர்.



கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு கிணத்துக்கடவு பகுதியில் இருந்து சுற்றுலா வந்த 10 கல்லூரி மாணவர்கள் நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கும் பொழுது ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்கள் உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டம் பொறுப்பு அமைச்சரும், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை அமைச்சருமான முத்துசாமி மற்றும் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, மாவட்ட செயலர் தளபதி முருகேசன், மற்றும் நகர செயல்லார் சுதாகர், அரசு அதிகாரிகள் நகரமன்ற துணை தலைவர் தா மா செந்தில்குமார் ஆகியோர்கள் விபத்து நடந்த ஆற்று பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.



ஆற்றில் இறந்தவர்கள் புகைப்படத்துடன் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆற்ருக்கு பொதுமக்கள் செல்லாதவாறு வேலி அமைத்து தடை விதிக்கலாம் என்றும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் தடுக்க ஏற்பாடு செய்வதாகவும் ஆய்வு செய்தனர்.



பின்பு நகராட்சி அலுவலகத்தில் இந்த சம்பவம் குறித்து கலந்து ஆலோசனை நடத்தப்பட்டது.



இதில் அனைத்து துறை அதிகாரிகளும் 21 வார்டு உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து விபத்தை தடுக்க பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர். அப்பகுதியில் கேமரா மற்றும் கவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட ஆலோசனை தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...