நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் - திருப்பூரில் தொடக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தை திருப்பூரில் அயலக அணி செயலாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அப்துல்லா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திமுக தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் திருப்பூரில் மட்டும் ரெண்டு லட்சம் இலக்கு நிர்ணயம்.

நீட் தேர்வு விலக்கு எங்கள் இலக்கு என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய அளவில் திமுக சார்பில் திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பாக கையெழுத்து இயக்கம்தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் துவங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தினை மாநிலங்களவை உறுப்பினரும் திமுகவின் அயலக அணி செயலாளருமான எம் எம் அப்துல்லா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். இந்நிகழ்வை மக்கள் இயக்கமாகக் கொண்டு சேர்த்து 50 நாட்களில் திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 2 லட்சத்திற்கும் மேலான கையெழுத்துக்களை பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...