கோவையில் ரயிலில் ஹெராயின் கடத்தி வந்த வாலிபர் கைது - ரூ.5.6 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

கோவையில் அசாம் திப்ருகார்–கன்னியாகுமரி ரயிலில் ரூ.5.6 லட்சம் மதிப்பிலான ஹெராயினை கடத்தி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


கோவை: யிலில் ஹெராயினை கடத்தி வந்த வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவையில் கோவை ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுபாப்பு படை போலீசார், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து கோவை வரும் ரயில்களில் சிறப்பு சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து கோவை வந்த அசாம் திப்ருகார்–கன்னியாகுமரி ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகம்படும் படி இருந்த வாலிபரை பிடித்து, அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் ரூ.5.6 லட்சம் மதிப்பிலான, 70 கிராம் ஹெராயின் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் அசாமை சேர்ந்த வாசிம் அக்ரம்(23) என்பதும், அசாமில் இருந்து கேரளாவிற்கு ஹெராயினை கடத்தி செல்வதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஹெராயினை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...