உடுமலை அருகே இலக்கிய மன்ற விழா துவக்கம் - மாணவர்கள் ஆர்வம்

உடுமலை அடுத்த பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, தமிழ் கூடல்விழா, கலை இலக்கிய வெற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை அருகே அரசு பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் மாணவர்கள் பங்கேற்பு.

உடுமலை அடுத்த பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, தமிழ் கூடல்விழா, கலை இலக்கிய வெற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியை அ. ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். வரலாற்று ஆசிரியை பி.மாலா வரவேற்புரை வழங்கினார்.

முதுகலை தமிழ் ஆசிரியை வி.ஜானகி இலக்கிய மன்றத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி எடுத்து உரைத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் செ. சரவணன் தமிழ்மொழியின் தொன்மையும் மொழியின் சிறப்புகளும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பட்டதாரி ஆசிரியர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

இதையடுத்து கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை பரிசுகள் வழங்கினார். மாணவ மாணவிகள் சங்க இலக்கிய பாடல்களையும் பாரதியார் பாரதிதாசன் போன்ற தமிழ் புலவர்களின் பாடல்களை குழுவாக சேர்ந்து பாடினார்கள்.நிறைவாக ஆசிரியை ஆர்.பார்வதி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...