தாராபுரத்தில் திடீரென கேட்ட பயங்கர வெடி சத்தம் - 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கேட்டதால் மக்கள் அச்சம்

தாராபுரத்தில் இன்று காலை 11 மணியளவில் திடீரென பயங்ர வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சத்தம் கேட்ட நேரத்தில் வானம் புகை மண்டலம் போல் காட்யளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திடீரென ஏற்பட்ட வெடி சத்தம், விண்கற்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட சத்தமா அல்லது நில அதிர்வு காரணமா என ஒருவருக்கொருவர் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திடீரென காலை 11 மணி 50 நிமிடத்தில் ஊரையே குலுக்கும் அதி பயங்கர வெடி சத்தம் வந்தது. இந்த சத்தமானது சுமார் 20கிலோமீட்டர் தொலைவிலுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த வெடி சத்தத்தை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தபோது வானில் புகைமண்டலமாக காணப்பட்டது என தெரிவிக்கின்றனர்.

மேலும் ஒரு முறை ஏற்பட்ட மிக பயங்கர வெடி சத்தத்தால் வானில் விண்கற்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டதால் ஏற்பட்ட சத்தமா அல்லது நில அதிர்வு காரணமா என ஒருவருக்கு ஒருவர் செல்போன் மூலம் ஒருவருக்கொருவர் விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சத்தம் குறித்த பதிவுகள் வைரலாக பரவி வருகின்றன.

இதுகுறித்து தாராபுரம் காவல் துறையும் வருவாய்த் துறையும் இதுவரை முறையான விளக்கம் அளிக்கவில்லை.

தாராபுரம் நேதாஜி தெரு சின்ன கடைவீதி ஆகிய குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் வீட்டை விட்டு அலறி அடித்தபடி வெளியே அதிர்ச்சியுடன் வானத்தையே பார்த்தனர் இதனால் தாராபுரம் மூலனூர் குண்டடம் இதனைச் சுற்றியுள்ள 20க்கு மேற்பட்ட நகர் மற்றும் கிராம பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...