பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் - கூடலூர் நகராட்சி தலைவர் ஆய்வு

கோவை கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாடு, கட்டிடங்களின் உறுதித் தன்மை, சுகாதர வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து நகராட்சித் தலைவர் அறிவரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: பழுதடைந்த கட்டடங்களில் கல்வி பயின்ற மாணவர்கள் உடனடியாக வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பாடு, கட்டிடங்களின் உறுதித் தன்மை, சுகாதர வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து நகராட்சித் தலைவர் அறிவரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை முறையாக செயல்படுகிறதா என்பது குறித்தும், ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை உள்ள பள்ளிக் கட்டிட்ங்களை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்ற ஏற்பாடுகள், புதிய வகுப்பறை கட்ட இடம் தேர்வு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.



ஆய்வில் நகராட்சி ஆணையாளர் மனோகரன் தலைமையில் பொறியாளர் ராஜேஷ், திட்டமிடுதல் ஆய்வாளர் பழனிசாமி, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நல்லாசிரியர் கருப்புசாமி, ஹரீட்டா ப்ளோரி, மேலாண்மை குழு பொறுப்பளர் காளியண்ணன், வட்டார ஒருங்கினைப்பாளர் சுமதி, சுகன்யா, ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

ஆய்வில் கலந்துகொண்ட நகராட்சி தலைவர் அறிவரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகளிடம் காலை உணவு குறித்து விசாரித்தார். மேலும் செல்வபுரத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஒரு வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதை பார்த்து அங்கிருந்த மாணவர்களை வேறு வகுப்புக்கு மாற்றி அந்த அரையை பூட்டிவைத்ததனர்.



உடனடியாக புதிய வகுப்பைறை கட்டவேண்டும் சிமெண்ட் சீட்டில் உள்ள வகுப்பறைகளை கான்கிரீட் கட்டிடமாக மாற்றவும், விறகு அடுப்பு உள்ள சமையல் கூடத்தில் கேஸ் வசதி செய்து கெடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் நகரமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி, ரேவதி, ரம்யா, மணிமேகலை, சித்ரா, வனிதாமணி, அகில்சந்திரசேகர், துரை செந்தில்குமார், பேங்க் முருகேசன், ஸ்ரீதர், பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்பழனிசாமி, பிட்டர் வேலாயுதம், காலை உணவு திட்ட பொறுப்பாளர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...