திருப்பூரில் லியோ திரைப்படம் வெளியீடு - 20 அடி நீளமுள்ள கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்

திருப்பூரில் 20 அடி நீளமுள்ள கேக்கை விஜய் ரசிகர்கள் வெட்டி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் லியோ திரைப்படத்தை வரவேற்றனர்.


திருப்பூர்: தாராபுரம் சாலையில் உள்ள உஷா திரையரங்கில் விஜய் ரசிகர் விஜய் ஏற்பாட்டில் திரையரங்கம் முழுவதும் திருவிழா போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளியாகிறது.



பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தை வரவேற்கும் வகையில் திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள உஷா திரையரங்கில் விஜய் ரசிகர் விஜய் ஏற்பாட்டில் திரையரங்கம் முழுவதும் திருவிழா போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



மேளதாளத்துடன் சிங்கம் வேடமணிந்தவர்கள் நடனமாட கார் ஜீப் உள்ளிட்டவை முழுவதுமாக லியோ திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ஊர்வலமாக திரையரங்கிற்கு கொண்டு வரப்பட்டு விஜயின் புகைப்படங்கள் அடங்கிய 20 அடி நீளமுள்ள கேக் வெட்டப்பட்டு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.



விஜய் ரசிகர்களின் இந்த செயலால் திரையரங்கம் முழுவதும் தீபாவளி பண்டிகை போல காட்சி அளித்தது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...