பொள்ளாச்சி-போத்தனூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இன்று சோதனை

பொள்ளாச்சி - போத்தனூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, சோதனை ஓட்டம் இன்று (19ம் தேதி) நடப்பதால், பொதுமக்கள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: இன்று,காலை, 7:30 மணிக்கு துவங்கி, 10:50 மணி வரை இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரயிலானது, 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உள்ளது.

ரயில்வே தண்டவாளம் உறுதித்தன்மையை அறியவும், ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், இன்று திண்டுக்கல்-ஈரோடு ரயில், பொள்ளாச்சி - போத்தனுார் வழியாக சோதனை ஓட்டம் செல்கிறது.

இன்று, காலை, 7:30 மணிக்கு துவங்கி, 10:50 மணி வரை இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரயிலானது, 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உள்ளது.

அதனால், ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம். மேலும், தண்டவாளத்தின் அருகே கால்நடைகள் மேய்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிவேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்திய பின், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், பொள்ளாச்சி - கோவை ரயிலின் வேகம் விரைவில் அதிகரிக்கப்படும்.

அதேபோன்று, பொள்ளாச்சியில் இருந்து, கோவை, திருப்பூர், சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கவும் வாய்ப்புள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...