திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் குதித்து உயிரிழந்த 2 பேர் - அடையாளம் கண்டது காவல்துறை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் குதித்து உயிரிழந்தவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் போலிசார் ஓப்படைத்தனர்.


திருப்பூர்: புற்றுநோயால் அவதியடைந்த கணவன் மனைவியுடன் கால்வாயில் குதித்து தற்கொலை.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வாளவாடியை பூர்வீகமாகக் கொண்டவர் கோவிந்தராஜ்(80). இவருக்கு சாந்தாமணி(75) என்ற மனைவியும் ராதா, மகேஷ் என்ற மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ராதா என்பவர் கோவை மாவட்டம் சூலூரிலும், மகேஷ் என்பவர் உடுமலையிலும் வசித்து வருகின்றனர். தம்பதியர் இருவரும் மகள்கள் வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கோவிந்தராஜ்க்கு புற்றுநோய் ஏற்பட்டதாக தெரிகிறது.

அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று தனது மனைவி சாந்தாமணியை அழைத்துக்கொண்டு திருமூர்த்திமலைக்கு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் காண்டூர் கால்வாயில் குதித்து தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடல் திருமூர்த்தி அணையில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர்கள் இருவர் குறித்த தகவலும் போலீசார் தரப்பில் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் தற்போது இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தெரியாத பரிசோதனைக்கு பின்பு அவர்களது உடல் மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...