ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைப்பு

கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனைமலை வட்டம், திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), 18.10.2023 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் வருகின்ற 31.10.2023 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கொடுக்கலாம். மனுக்கனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 31.10.2023 அன்று திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...