தாராபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் விளக்கக் கூட்டம்

நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமையில் தாராபுரம் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும், அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளதாக நகர மன்றத் தலைவர் பாபு கண்ணன் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி ஜவகர் நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாரி ஜான் முன்னிலை வைத்தார்.



தலைவர் பாபு கண்ணன் பேசியதாவது, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தனியார் உணவகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனி நபர்களின் இல்லங்கள், ஒலித்தவைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவான அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும் அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி ஐயப்பன் ஷாலினி நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...