வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! - கோவையில் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்

லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளநிலையில், வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! தலைமை செயலக படத்துடன் கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வரவேற்றுள்ளனர்.


கோவை: 86வது வார்டு புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் "தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம். ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஜர் நடிப்பில் லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட துவங்கி உள்ளனர். அதே சமயம் விஜயின் பல்வேறு நலத்திட்டங்கள் அரசியல் ஈடுபாட்டிற்கு உதாரணமாய் விளங்கி வருகிறது. இதுபோன்ற விஜய்யின் அரசியல் முன்னெடுப்புகள், திரைப்பயணங்களை அவரது ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டி உணர்வுகளை வெளிபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



அந்த போஸ்டரில் "லியோ வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! என குறிப்பிட்டு 234 என தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளனர்.



அதே போன்று 86வது வார்டு புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் "தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம்... ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது..." என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...