உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நீட்டிப்பு

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து படுகை நான்காம் மண்டலப் பாசனப் பாலாறு பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கான பாசனத்திற்கு தண்ணீர் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கால நீட்டிப்பு செய்ய அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையில்,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து 2023- 2024 ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், படுகை நான்காம் மண்டலப் பாசனப் பாலாறு பகுதிகளுக்குட்பட்ட நிலங்களிலுள்ள. நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கூடுதலாக 18.10.2023 முதல் 24.10.2023 முடிய 6 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து, மொத்தம் 410 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட). தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 94068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். என தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...