பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஓட்டுநர் தொழிற்சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: ஆட்டோகளுக்கான மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைத்திட வலியுறுத்தி கோவையில் போராட்டம்.

தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் "தமிழக அரசு 2019 மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழகத்தில் திருத்தங்களோடு அமல்படுத்த வேண்டும், அநியாய ஆன்லைன் அபராதங்களை உடனடியாக கைவிட வேண்டும், செயலி வடிவில் இயங்கும் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும், ஆட்டோகளுக்கான மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைத்திட வேண்டும், ஆட்டோக்களை போன்று கால் டாக்சிக்ளுக்கும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும், சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவதை தடுத்து நிறுத்தி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தையும் தமிழக அரசின் வரி வருவாயை உறுதி செய்ய வேண்டும், பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...