டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் போராட்டம் நடத்தினர்

தாராபுரத்தை அடுத்த தேர்பாதை டாஸ்மார்க் கடையை அகற்ற வேண்டும் என பொது மக்களும், அகற்ற கூடாது என வணிகர்களும் போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.


திருப்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கெத்தல்ரேவ் பிரிவு தேர்பாதையில் பகுதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது‌.தேர்பாதை டாஸ்மார்க் கடையால் இடையூறு இருப்பதாக கூறி கடந்த வாரம் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



இந்நிலையில் இதே அரசு மதுபான கடையால் அருகில் உள்ள வியாபார நிறுவனங்கள் மளிகை கடை உணவகங்கள் மருந்தகம் செல்போன் கடை கோழிப் பண்ணைகள் விவசாயம் கால்நடை வளர்ப்பு அனைத்தும் நல்ல முறையில் செயல்பட்டு கொண்டு உள்ளது. ஆகவே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று இப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

டாஸ்மார்க் மதுபான கடையை இடமாற்றம் செய்தால் இப்பகுதியில் உள்ள மளிகை கடை உணவகங்கள் மற்ற இதர நிறுவனங்கள் வியாபாரம் பாதிப்பு ஏற்படும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.



தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் மூலனூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...