லாட்டரி மார்டின் மீது குறி வைத்து வருமானவரித் துறை ரெய்டு ஏன்? - மார்ட்டினின் மனைவி விளக்கம்

தொழிலதிபர் மார்டின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என அவரது மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் கோவையில் பேசியுள்ளார்.


கோவை: லாட்டரி மார்டின் மீதுகுறி வைத்து வருமானவரித் துறை ரெய்டு ஏன்? என அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவையில் ஆயிரம் கிலோ கேக் எடை தயாராகி வருகிறது.

கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனி ஹாஸ் 6ஹோட்டலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "1000" கிலோ கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.



இதில் கேக் தயாரிக்க தேவையான முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலந்து 1000 கிலோ தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சமூக ஆர்வலர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் பெண்கள், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊழியர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

பின்னர் இது குறித்து பேசிய லீமா மார்டின்,



ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை குடும்ப விழாவாக கொண்டாடுவதாகவும் இந்த ஆண்டு1000"கிலோ கேக் தயாரிப்பதற்கான உலர் பழங்கள் கலவை பணிகளை அனைவரும் இணைந்து செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தெரிவித்தனர்.

மேலும் தொழிலதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் நடைபெற்ற வருமானத்துறை சோதனை குறித்து பேசிய அவரது மனைவி லீமா ரோஸ் மார்டின், வருமான வரித்துறை அதிகாரிகள் கல்கத்தா பகுதியில் இருந்து திடீர் என வந்தார்கள் எனவும்

இன்று காலை சோதனை முடிவடைந்தது என்றார்.

மேலும் தேர்தல் வருகின்றது என்பதால் தவறான செய்தி அவர்களுக்கு சென்றுள்ளது எனவும் அதனால் வந்து உள்ளார்கள் எனவும் டாக்குமெண்ட்ஸ் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்றார். மேலும் கோவை நகரப் பகுதிகளில் கேமரா பொருத்துவதற்காக 7 கோடியே 7 லட்சத்தி 82 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நகரத்தைச் சுற்றி 240 கிலோ மீட்டர் சுற்றளவில் கேமராக்கள் பொறிப்பதற்கு கோவை மாநகராட்சிக்கு ரோட்டரி கிளப் சார்பாக நிதி வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...