வேலம்பட்டியில் விவசாய நிலத்தில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு - அளவீடும் பணி பாதியிலேயே நிறுத்தம்

திருப்பூர் மாவட்டம் வேலம்பட்டியில் விவசாயி நிலத்தில் அனுமதியின்றி சுங்கச்சாவடி அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சுங்கச்சாவடி அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


திருப்பூர்: விவசாயின் நிலத்தில் அனுமதி இன்றி தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் வரை சுமார் 33 கிலோமீட்டர் அமைக்கப்பட்டுள்ள NH-381 என்ற தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசிபாளையம் அருகே வேலம்பட்டி என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்கம் வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் சுங்கச்சாவடி கட்டப்பட்டுள்ளதாகவும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நீர் நிலையில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடித்து அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடித்து அகற்ற ஊராட்சி நிர்வாகத்திற்கும், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்நிலையில் சுங்கச்சாவடியை இடித்து அகற்றாமலேயே சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து சுங்கம் வசூலிக்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள விவசாயி துரைசாமி என்பவர் பேக்கரி ஒன்றையும் நடத்தி வருகிறார். பேக்கரி முன்பு தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க இன்று அளவீட்டுப் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த துரைசாமியையும், அவரது குடும்பத்தாரையும் சுங்கச்சாவடி மேலாளர் சிவசங்கர் என்பவர் மூலம் திட்ட இயக்குனர் செந்தில் என்பவர் தன்னை மிரட்டியதாகவும் தங்களது நிலத்தில் அனுமதி இன்றி தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி அளவீட்டு பணிக்காக வந்த அதிகாரிகளுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.



தற்காலிக சுங்கச்சாவடி அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் மீறி அமைத்தால் இப்பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் தற்காலிக சுங்கச்சாவடி அமைப்பதற்கான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அளவீட்டு பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...