தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஆய்வு கூட்டம் - ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள், குடிநீர் பிரச்சினை, தார் சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


திருப்பூர்: கிராம ஊராட்சி பகுதியில் மிகவும் பழுது அடைந்த சாலைகளை புதுப்பிப்பது, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் த.பானுப்பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) என். சிவகுருநாதன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள், குடிநீர் பிரச்சினை, தார் சாலை அமைப்பது குறித்தும் மற்றும் 16 கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.



அப்போது ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில் குமார் கூறும்போது, இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கை கொடுக்கவில்லை. இதனால் கிராமப்புற பகுதியில் பல இடங்களில் குடிநீர் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோன்று கிராம ஊராட்சி பகுதியில் மிகவும் பழுது அடைந்த சாலைகளை புதுப்பிப்பது, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தெய்வசிகாமணி, பழனிசாமி, கீதாலட்சுமி, கலைச்செல்வி, சுப்பிரியா உள்ளிட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...