கலாம் பிறந்த நாள் - பல்லடம் அருகே சிலம்பம் சுற்றி நெழிகி ஒழிப்பு பற்றி மாணவர்கள் விழிப்புணர்வு

ஏவுகனை நாயகன் ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்லடம் அருகே கேத்தனூரில் 92 நிமிடங்கள் இடைநில்லாமல் சிலம்பம் சுற்றி நெகிழி ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: சிலம்பம் சுற்றும் நிகழ்வின் தொடர்ச்சியாக மரம் வளர்ப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு குறித்தும், மாணவர்களும், பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



பாரத தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 92 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் நம் கை சிலம்பம் அமைப்பினர் இணைந்து மரம் வளர்ப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 மாணவர்கள் பங்கேற்ற 92 நிமிடங்கள் இடைநில்லாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி கேத்தனூர் அரசு பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் சித்ரா ஹரி கோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.



நம் கை சிலம்பம் அமைப்பின் பயிற்சியாளர் சுதாகர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலம்பம் சுற்றும் நிகழ்வின் தொடர்ச்சியாக மரம் வளர்ப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு குறித்தும், மாணவர்கள், பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



மேலும் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...