உடுமலை அருகே அரசு துவக்கபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின் படி உடுமலை ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் மகிழ்ச்சியுடன் ஈடுபட பள்ளி கட்டமைப்பு வசதி முக்கியம் என மேலாண்மை குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அதன் படி உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். உடுமலை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அக்டோபர் மாத கருப்பொருள்கள் பற்றி கலந்து உரையாடினார்.

குறிப்பாக உப குழுக்கள் அமைப்பது, பள்ளி மாணவர்களை விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பது பற்றியும், பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும் பள்ளிக்கு இந்த வருடம் வழங்கப்பட்டுள்ள மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தில் இருந்து செலவிடப்பட்ட விவரங்கள் பற்றியும், வண்ணமயமான நாற்காலிகளும் மேசைகளும் ஒன்று முதல் 3-ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாங்கப்பட்டு உள்ளதையும் மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் மகிழ்ச்சியுடன் ஈடுபட பள்ளி கட்டமைப்பு வசதியும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிறைவாக பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...