புரட்டாசி கடைசி நாள் - மலைமந்திரிபாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மலைமந்திரிபாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


திருப்பூர்: 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சிறப்பு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மலைமந்திரிபாளையத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. குழந்தை இல்லாதவர்கள், தொழில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் 60 நாட்களுக்குள் வேண்டும் வரங்களை நிறைவேற்றி தரும் ஸ்தலமாக இத்திருக்கோவில் விளங்குகிறது.



ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று கதிராய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இரவு கோவில் கருவறை மாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலை மற்றும் கன்னிமார் சிலைகளை கீழே இறக்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக காலை முதல் மூலவர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திருப்பூர், கோவை,மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை மீண்டும் பெருமாள் மற்றும் கன்னிமார் சிலைகளுக்கு கபால பூஜை செய்யப்பட்டு திரு வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.

இந்நிகழ்வினை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செல்வராஜ்,நடராஜன், முருகேசன்,பழனிச்சாமி,வேலுச்சாமி,சிடிசி பழனிச்சாமி, சரவணன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...