உடுமலை அருகே திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலை அருகே குடிமங்கலத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.


திருப்பூர்: திமுக சார்பில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு இன்று குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி தலைமையில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் பி.சாமிநாதன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.



மேலும் அவர் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

இங்கு குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 100 கர்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதே போல தேர்தல் வாக்குறுதியில் அளித்த முக்கியமான வாக்குறுதி மகளிர் உரிமைத் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் காலை உணவு திட்டம் உட்பட பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் முனைப்பு காட்டி வருகிறார் என பேசினார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன், ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா கிரி, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...