குண்டடம் அருகே மனைவியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

குண்டடம் அருகே உள்ள எரகாம்பட்டியில் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: கணவன் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளிக்க சென்றபோது காரின் கண்ணாடிகளை உடைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள எரகாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). இவரது மனைவி சந்தியா. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியாவை அவருடைய கணவர் சுரேஷ்குமார் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசில் புகார் கொடுக்க காரில் குண்டடம் சென்று ஒரு பேக்கரி முன்பு காரை நிறுத்தி விட்டு போலீஸ் நிலையத்திற்கு சந்தியா சென்றார்.

அப்போது அங்கு வந்த சுரேஷ்குமார் காரின் கண்ணாடிகளை உடைத்துவிட்டார். இதையடுத்து சந்தியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...