தாராபுரம் அரசு கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா அக்கல்லூரியில் நடைபெற்றது.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைகளும், அதனை எதிர்கொள்ளும் சவால்களும் குறித்து தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழாவில் பேராசிரியர்கள் பேசினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா கல்லூரியில் நடைபெற்றது.



விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சத்யா அனைவரையும் வரவேற்றார். வேதியியல் துறை விரிவுரையாளர் கனகராஜ் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் சிவசாமி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைகளும், அதனை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தொகுத்து கூறினார். தமிழ் துறை பேராசிரியர் கீதா ராமன் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அதனை கவிதைகளாக விளக்கினார்.

வணிகவியல் துறை விரிவுரையாளர் வெங்கட்ரமணன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக விழா ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர்கள் கார்த்திகேயன் மற்றும் சுதாகர் ஆகியோர் நன்றி கூறினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...