விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முத்தையன் கோவிலில் வழிபாடு

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள விவசாயி முத்தையன் கோவிலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மலர்தூவி வழிபாடு நடத்தினர்.


: திருப்பூர்: ஆங்கிலேயர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட விவசாயி முத்தையனின் கோவிலில் சிறப்பு பூஜை.

குண்டடம் அடுத்துள்ள வெருவேடம்பாளையத்தில் ஆங்கிலேயனுக்கு வரிகொடுக்க மறுத்ததால், ஆங்கிலேயர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட விவசாயி முத்தையனுக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடைபெற்று வரும் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு யாத்திரை குழுவினர் வந்தனர்.



அவர்களை வெருவேடம்பாளையம் கிராம மக்கள் வரவேற்றனர். தொடர்ந்து அக்குழுவினர் முத்தையன் கோவிலில் சூடம் எற்றி, மலர்தூவி வழிபாடு நடத்தினர்.

அதன் பின்னர் விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் பீமராவ் முத்தையனின் வரலாற்றை விவரித்து பேசியதோடு யாத்திரையின் நோக்கங்களையும் விளக்கிப் பேசினார். இதில் மாநில இணை அமைப்பாளர் சிவபிரபாகர், மாநில பொருளாளர் பாலு, மாநில பொருப்பாளர் கணேஷ்பாபு, கோட்ட அமைப்பாளர் சேனாதிபதி, மாவட்ட செயலாளர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பொருப்பாளர் தமிழ்செல்வன், பா.ஜனதா மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாவட்ட செயலாளர் விஜயகுமார், கூட்டுறவு மேலாண்மை பிரிவின் குண்டடம் ஒன்றிய தலைவர் வேலுசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...