வால்பாறையில் திமுக சார்பில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்

திமுக சார்பில் வால்பாறையில் நடைபெற்ற தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில்,வாகனம் நிறுத்தும் இடம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: சங்க உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக சார்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் அருணகிரிநாதன், செயலாளர் ராம், துணைத் தலைவர் ராஜா மற்றும் வால்பாறை lpf சங்கம் வினோத் மற்றும் சவுந்திரபண்டியன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



வால்பாறையில் உள்ள ஆட்டோ, கார், வேன், லாரி ஓட்டுநர்கள் திமுக சார்பாக தொழிற்சங்கங்களில் இணைந்து ஓட்டுனர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நலத்திட்ட உதவிகள் வெளி மாநிலங்களில் சென்றால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் உறுப்பினர் அட்டை பெற்று அவர்களுக்கு தேவையான நல வாரியத்தின் மூலம் உதவிகளும் காப்பீடு திட்டங்களும் மருத்துவகாப்பீடு திட்டங்களும் செயல்படுத்தப்படுவோம் என்றும், வால்பாறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, மேலும் வால்பாறையில் வாகனங்களை நிறுத்த அதற்கு இடமில்லாமல் உள்ளதால் வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தினால் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

வால்பாறையில் வாகனம் நிறுத்தும் இடம் வழங்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்று வைத்தனர். சங்க உறுப்பினர்களுக்கு உரிய நடவடிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் நாலாவது வார்டு உறுப்பினர் ஜே பாஸ்கர் பாஸ்கர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...