உடுமலை ஏழுமலையான் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தர பக்தர்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது


திருப்பூர்: குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும் உற்சராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

அது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த மூன்று சனிக்கிழமைகளில் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற கிராமம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.



ஆனால் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை இந்த சூழலில் புரட்டாசி மாதத்தின் இறுதி சனிக்கிழமை விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரளக் கூடிய வாய்ப்பு உள்ளது.

போதிய மழைப்பொழிவு இல்லாததால் வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளிலும் நீர்வரத்து இல்லை. இதனால் தண்ணீர் கிடைப்பது சவாலான விஷயமாகும். எனவே ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் நலன் கருதி ஆங்காங்கே தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதி கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...