இ - பைலிங் நடைமுறையை ஒத்திவைக்க கோரி உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பயிற்சி பெற்ற ஊழியர்களை நீதிமன்றத்தில் நியமனம் செய்ய வலியுறுத்தியும் இ-பைலிங் நடைமுறையை ஒத்திவைக்க கோரியும் உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திருப்பூர்: வழக்குகளை தாக்கல் செய்வதற்கு இ-பைலிங் நடைமுறை கொண்டு வருவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உடுமலை கச்சேரி வீதியில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தில் சார்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2, மாவட்ட கூடுதல் 4-வது நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அது தவிர உடுமலை தாசில்தார் அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு இ- பைலிங் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

அந்த முடிவினை எதிர்த்தும், இ-பைலிங் நடைமுறையை 6 மாதகாலம் ஒத்திவைக்க கோரியும், அதற்குள் பயிற்சி பெற்ற ஊழியர்களை நீதிமன்றத்தில் நியமனம் செய்ய வலியுறுத்தியும் உடுமலை வக்கீல் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பிரபாகரன், துணைத் தலைவர் சிவராமன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள், மூத்த, இளம் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...