100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த கோரிக்கை- கோவை அருகே பெண்கள் போராட்டம்

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடத்த ஆர்ப்பாட்டத்தில் நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: கோவை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமயம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்து கொண்டிருப்பதை கண்டித்தும் 100 நாள் வேலையை 200 நாளாக அமல்படுத்த கோரியும் கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே வி தனபால் தலைமை தாங்கினார்.



கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் ஆர் செல்வராஜ், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் R. கேசவ மணி அவர்களும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின் கட்சி செயலாளர் மோகன்ராஜ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழர் ஏ. ஆர்.துரைசாமி சுப்பிரமணியம் , கோகுல் கிருஷ்ணன் மற்றும் 77 விவசாயம் பெண் தொழிலாளர் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...