கோவை துடியலூர் அருகே ரூ. 87 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் ஊராட்சியில் சுமார் 87 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


கோவை: முதல்வர் கிராம இணைப்பு சாலை திட்டத்தில் கீழ் வட்டமலைபாளையம் பிரிவு பகுதியில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.



அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கீழ் ரூபாய் 59 லட்சத்து 85 ஆயிரத்து 995 மதிப்பில் வி.கே.வி.நகர் பகுதியிலுள்ள லட்சுமி நகர் ஒரு பகுதி, சி.எஸ்.ஐ சர்ச் பகுதி, ஸ்ரீ நகர் சாலை ஆகிய இடங்கள் மற்றும் காந்தி காலனி அருகேயுள்ள ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், ஆடியபாரதம் வீதியில் வடிகால் அமைத்தல், அசோகபுரம் ஊராட்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி நிறுத்த இடம் அமைத்தல், ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு புதிய கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கும் பூமி பூஜை நடைபெற்றது.



இதற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதற்கு மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்புனர் வீரபத்ரன், ஒன்றிய துணை செயலாளர் அசோக், மாவட்ட பிரதிநிதி செந்தில்ராஜா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜயன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் குணசீலன், கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், சதகத்துல்லா, வார்டு கவுன்சிலர்கள் நடராஜன், நாகராஜ் என்கிற ஸ்ரீராம், சுதா செல்வகுமார், பிரசன்னா ராணி, முருகம்மாள், கட்சி நிர்வாகிகள் வேல்முருகன், ராஜகோபால், சங்கர், வேணுகோபால், வர்கீஸ், சேகர், சிவபாதம், அப்துல்சாத்தாக், ஜெயகுமார், போஜராஜன், ஸ்ரீதர், பாரதி, சரவணகுமார், சுந்தரம், சரவணன், ஒன்றிய இளைஞர் அணியினர் நிர்மல்குமார், மணிகண்டன், சிவராஜ், ராம்குமார், பிரவீன்குமார், புஷ்பராஜ், காண்ட்ராக்டர்கள் சுரேஷ், வசந்த், ஏ.எஸ்.பி அன் கோ மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...