கோவையில் மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் பேரிடர் மேலாண்மை மாதிரி ஒத்திகை நடைபெற்றது.


கோவை: பேரிடர் காலங்களில் எவ்வாறு ஆபத்தில் உள்ளவர்களை மீட்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மத்திய மண்டலம் வாலாங்குளத்தில் பேரிடர் மேலாண்மை மாதிரி ஒத்திகை நடைபெற்றது.



இந்த ஒத்திகை நிகழ்ச்சி கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் 38 தீயணைப்பு துறையை சேர்ந்த பல்வேறு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். மேலும் மாநகராட்சி மருத்துவக் குழுவினர் மாதிரி ஒத்திகை முதலுதவி சிகிச்சையை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் எவ்வாறு ஆபத்தில் உள்ளவர்களை மீட்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியை பொதுமக்களும் பார்வையிட்டு பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்து அறிந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...