தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க வேண்டும் - கோவையில் சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு அளவு கணக்கிடப்படும் நிலையை மாற்றி மாதம்மாதம் கணக்கீடு எடுக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரிய விதிகளை சீரமைக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், "சுமார் 1000 சதுரடி வரை வணிக நோக்கத்தோடு கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அதற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வர வேண்டும், சுமார் ஆறு அல்லது எட்டு வீடுகள் வரை உள்ள கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு கொடுப்பதற்கு விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு அளவு கணக்கிடப்படும் நிலையை மாற்றி மாதம்மாதம் கணக்கீடு எடுக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இயக்கத்தின் தலைவர் சாக்ரடீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கும் வணிக கட்டிடங்களுக்கும் மின் இணைப்பு வழங்குவதில் நீதிமன்ற தடை இருப்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாகவும் தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...