வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு - தாராபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை ஆலோசனைக் கூட்டம்

தாராபுரத்தில் வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழ்நாட்டு ஆளுநர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார் என்று ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் புகார் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



ஸ்ரீ ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீரமங்கை குயிலில் நினைவேந்த நிகழ்ச்சி குறித்து செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கூறுகையில், தமிழ்நாட்டு ஆளுநர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார்.

விடுதலைப் போராட்ட வீரர் பொன்மானுக்கு மணிமண்டபம் கட்ட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியும் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. மணிமண்டபம் கட்ட இடத்தை தேர்வு செய்து உடனடியாக மணிமண்டபம் கட்டும் பணியை துவக்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை குறித்த கேள்விக்கு அண்ணாமலை பாதையாத்திரை என்ற பெயரில் கேவலப்படுத்தி வருகிறார். பெயரை ஏற்ப தமிழ்நாட்டில் அண்ணாமலை என்ன பேசுகிறார் என்று கேட்கக்கூட ஆள் இல்லை. ஏனென்றால் அண்ணாமலையின் பேச்சு கேலிக்கூத்தாக மாறிவிட்டது அண்ணாமலையின் பாதையாத்திரை வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...