ஈரானிய திருட்டு கும்பல் கைது - நகை, பணத்தை பறிமுதல் செய்து கோவை போலிசார் அதிரடி

சூலூரில் இருசக்கர வாகனத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசில் சிக்காமல் போக்கு காட்டி வந்த ஈரானியத்தை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்த போலீசார்  2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகை கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஈரானியர்களை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் இருந்து வரும் முருகன் கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மறுமணவர் ஒருவர் கோவிலின் அலுவலக அறையை உடைத்து அலுவலகத்திற்குள் உள்ளே இருந்த மேஜை டிராவை உடைத்து அதிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். அதே நாளில் மலுமிச்சம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு தங்க நகையை கொள்ளையடித்து சென்ற இளைஞரை சூலூர் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இரு வேறு திருட்டுகளில் ஈடுபட்ட நபர்களை கண்ணம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



விசாரணையில் இரு வேறு இடங்களில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் என்பது தெரிய வந்தது பின்னர் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து இருவரிடம் விசாரணை செய்தபோது யூனுஸ் உசேன் மற்றும் சமீர் என்பதும் தெரிய வந்தது பின்னர் இருவரிடமும் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணம் மற்றும் நான்கு சவரன் நகை திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மீட்கப்பட்டு பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மோகல் ஜாபர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...