உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

அடிப்படை தேவைகளை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் என கவுன்சிலர்கள் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: ஒன்றிய குழு பெருந்தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்ததால் உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய சாதரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகளை ஒன்றியகுழு கவுன்சிலர்கள் தெரிவித்தனர் குறிப்பாக ஓன்றிய பெருந் தலைவர் மகாலட்சுமி முருகன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் துவக்க விழாவுக்கு செல்வதாகவும் பெரும்பாலான பகுதிகளுக்கு வருவதில்லை எனவும், ஒன்றிய குழு தலைவருக்கு தெரியாமலே தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

மேலும் ஒன்றிய பெருந் தலைவர் பயன்படுத்தும் அரசு வாகனம் பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் வாகனம் ஓடுவது போல் கணக்கு காட்டி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது எந்த வேலைக்குச் சென்றாலும் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் கேட்பதாகவும் தெரிவித்தனர்.



மேலும் கணக்கம்பாளையம், ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி உட்பட பல்வேறு ஊராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் ஓன்றிய குழு உறுப்பினர்களுக்குகூட நலத்திட்டங்கள் குறித்து தகவல் சொல்வதில்லை எனவே அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஒன்றிய பெருந்தலைவர், அதிகாரிகள் முன்வர வேண்டும் இல்லையெனில் பொதுமக்களை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவது என ஒன்றிய குழு கவுன்சிலர்கள் தெரிவித்ததால் உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...