கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; நிர்வாக அதிகாரி விளையாட்டு ஆசிரியர் கைது

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர்.


கோவை: கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோபள்ளியில் பாலியல் தொல்லை புகாரில் 2 ஊழியர்கள் கைது செய்யபட்டனர்.

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டியில்ஸ்ரீ சைதன்யா டெக்னோ என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நிர்வாக அதிகாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நேராக பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்துள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மதியழகன், கல்பனா ஸ்ரீதர், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வி, ஆகியோர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பள்ளியின் நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் கணபதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் காரமடை வெள்ளியங்காட்டைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

மேலும் மாணவிகளிடம் இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் உங்களின் பெற்றோரிடம் உங்களைப் பற்றி தவறாக கூறி விடுவோம் என்று கூறி மிரட்டியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாக அதிகாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்துமகளிர் காவல்துறையினர், உடனடியாக இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இச்சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...