திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளுக்கு ஆபத்து இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள்146 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருப்பூர்: திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் போராட்டம் 146 வது நாளை எட்டியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலையே நம்பி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் நூறு ஏக்கர் பரப்பளவில் 765 கிலோவாட் துணைமின் நிலையம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த துணை மின் நிலையம் அமைக்கும் போது இப்பகுதியில் உள்ள 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு விவசாயம் மற்றும் கால்நடைகள பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
எனவே இந்த திட்டத்தை இப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூறியும், அதேபோல் இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதிகள் உள்ளதாகவும் இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பட்சத்தில பாதிக்கப்படுவதோடு, அதன் வரலாறு முற்றிலும் அழிந்து விடும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அதன் பாரம்பரியமும், வரலாறும் மக்களுக்கு தெரியாமலேயே போய் விடும் என்று கூறி இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று 146 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள குமரிக்கல் பகுதியில் மத்திய தொல்துறை சார்பில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலையே நம்பி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் நூறு ஏக்கர் பரப்பளவில் 765 கிலோவாட் துணைமின் நிலையம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த துணை மின் நிலையம் அமைக்கும் போது இப்பகுதியில் உள்ள 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு விவசாயம் மற்றும் கால்நடைகள பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
எனவே இந்த திட்டத்தை இப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூறியும், அதேபோல் இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதிகள் உள்ளதாகவும் இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பட்சத்தில பாதிக்கப்படுவதோடு, அதன் வரலாறு முற்றிலும் அழிந்து விடும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதன் பாரம்பரியமும், வரலாறும் மக்களுக்கு தெரியாமலேயே போய் விடும் என்று கூறி இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று 146 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள குமரிக்கல் பகுதியில் மத்திய தொல்துறை சார்பில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.