‌திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு - 146 வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்

திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளுக்கு ஆபத்து இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள்146 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


திருப்பூர்: திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் போராட்டம் 146 வது நாளை எட்டியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலையே நம்பி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் நூறு ஏக்கர் பரப்பளவில் 765 கிலோவாட் துணைமின் நிலையம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த துணை மின் நிலையம் அமைக்கும் போது இப்பகுதியில் உள்ள 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு விவசாயம் மற்றும் கால்நடைகள பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த திட்டத்தை இப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூறியும், அதேபோல் இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதிகள் உள்ளதாகவும் இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பட்சத்தில பாதிக்கப்படுவதோடு, அதன் வரலாறு முற்றிலும் அழிந்து விடும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



அதன் பாரம்பரியமும், வரலாறும் மக்களுக்கு தெரியாமலேயே போய் விடும் என்று கூறி இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று 146 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள குமரிக்கல் பகுதியில் மத்திய தொல்துறை சார்பில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...