‌திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு - 146 வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்

திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளுக்கு ஆபத்து இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள்146 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


திருப்பூர்: திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் போராட்டம் 146 வது நாளை எட்டியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலையே நம்பி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் நூறு ஏக்கர் பரப்பளவில் 765 கிலோவாட் துணைமின் நிலையம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த துணை மின் நிலையம் அமைக்கும் போது இப்பகுதியில் உள்ள 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு விவசாயம் மற்றும் கால்நடைகள பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த திட்டத்தை இப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூறியும், அதேபோல் இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதிகள் உள்ளதாகவும் இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பட்சத்தில பாதிக்கப்படுவதோடு, அதன் வரலாறு முற்றிலும் அழிந்து விடும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



அதன் பாரம்பரியமும், வரலாறும் மக்களுக்கு தெரியாமலேயே போய் விடும் என்று கூறி இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று 146 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள குமரிக்கல் பகுதியில் மத்திய தொல்துறை சார்பில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...