‌விண்ணப்பித்த இரு வாரத்தில் நகல் குடும்ப அட்டை - கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

நகல் ரேஷன் கார்டு பெற, ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு இருவாரத்தில் தபால் மூலம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: விண்ணப்பித்த இரு வாரத்தில் நகல் குடும்ப அட்டை வீடு தேடி வரும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில், 10 ஆயிரம் ரேஷன் கார்டு நகல் அச்சிடப்பட்டு, விரைவு தபால் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளன. கார்டுதாரர்கள், www.tnpds.gov.in என்ற இணைய தளத்தில் நகல் குடும்ப அட்டை என்பதை தேர்ந்தெடுத்து, பதிவு செய்துள்ள மொபைல் போன் எண்ணை உள்ளீடு செய்தால், ஒருமுறை 'பாஸ்வேர்டு' அனுப்பப்படும்.

அதை பயன்படுத்தி, விண்ணப்பிக்கலாம். நகல் அட்டைக்கான கட்டணம் ரூ.20, அஞ்சல் வழி பெறுவதற்கு ரூ.25 என, 45 ரூபாய் கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்து, ஒப்புகை பக்கம் மற்றும் பணபரிவர்த்தனை குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இரு வாரத்துக்குள் நகல் ரேஷன் கார்டு, விண்ணப்பதாரர் முகவரிக்கு விரைவு தபால் வாயிலாக அனுப்பப்படும்.ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலோ, சேதம் அடைந்திருந்தாலோ அல்லது முகவரி திருத்தம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் ஆகிய திருத்தங்கள் செய்தபின், நகல் கார்டு பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம். நகல் கார்டு அச்சிட்டு வழங்க தனியார் நிறுவனத்துக்கோ, தனி நபருக்கோ எவ்வித அனுமதியும் அரசால் வழங்கப்படவில்லை என, ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...