தாராபுரம் அருகே செயல்படாத இ சேவை மையம் - செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் உள்ள இ சேவை மையம் செயல்படாத காரணத்தினால் பல்வேறு திட்டங்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே செயல்படாமல் உள்ள இ சேவை மையத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையம் பேரூராட்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் இ சேவை மையம் முறையாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் இணைப்பதிவாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தாராபுரம் வட்டார தலைவர் காளிதாஸ் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் இ சேவை மையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த மையத்தில் இரண்டு பணியாளர்கள் இருந்தும் முறையாக செயல்படுத்துவதில்லை.

இதனால் வருவாய் சான்றிதழ்கள் உள்ளிட்ட இதர சேவைகளுக்கு தனியார் சேவை மையத்தை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .எனவே கொளத்துப்பாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் இ சேவை மையத்தை முறையாக செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...