திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்தி மாவட்ட அளவில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி பாராட்டுவது என முடிவு செய்யப்பட்டது.


திருப்பூர்: இலக்கிய அணியின் துணைத் தலைவரும், தலைமைக்கழக பேச்சாளருமான தாரை சிவா தலைமையில் நடைபெற்ற, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு இலக்கிய அணியின் துணைத் தலைவரும், தலைமைக்கழக பேச்சாளருமான தாரை சிவா தலைமை தாங்கினார்.



அமைப்பாளரும், பூலுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான தங்கவேலு வரவேற்புரையாற்றி பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.



துணை அமைப்பாளர்கள் குண்டடம் ராமசாமி, கொடுவாய் நந்தகுமார், அலங்கியம் கவிஞர்.நிரஞ்சன் என்கிற கிருஷ்ணசாமி, மூங்கில்தொழுவு ஜெகதீசன், முளையாம்பூண்டி அர்ச்சுணன், பொள்ளாச்சி பாலன் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்தி மாவட்ட அளவில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி பாராட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

அந்த நிகழ்வுகளில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரத்தில் சிறப்பாக நடத்துவது, அதே போன்று ஒன்றியம், நகரம் மற்றும் பேரூராட்சி தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர்களை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முடிவில் நந்தகுமார் நன்றி கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...