தாராபுரம் பகுதியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் - குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி தலைவர் அறிவுரை

தமிழகத்தில் மிக வேகமாக வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அவற்றை கட்டுப்படுத்த தாராபுரம் நகராட்சி பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: வைரஸ் காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை, கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, தற்போது தமிழகத்தில் மிக வேகமாக வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தாராபுரம் நகராட்சி பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

அதேபோல தங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை, கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.மேலும் வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலிப்பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இதனால் வீட்டில் கொசு தொல்லையை ஒழிக்க முடியும், பாதுகாப்பான முறைகளை கடைபிடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றால் பாதிக்காமல் ஒவ்வொருவரும் தங்களை காத்து கொள்ள வேண்டும். அதேபோல கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுரகுடிநீரை குடிக்க வேண்டும்.

மேலும் காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் அதிகமாக இருக்குமேயானால் உடனடியாக தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...