அண்ணாமலை விரைவில் குணமடைய பிரார்த்தனை - கோவையில் மண்சோறு சாப்பிட்ட பாஜக நிர்வாகிகள்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி கோவை மாவட்ட பாஜகவினர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டும் அங்கப் பிரதர்ஸ்ணம் செய்தும் வழிபாடு நடத்தினர்.


கோவை: அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி கோவையில் மண்சோறு சாப்பிட்டு பாஜக நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். இதனையடுத்து மீண்டும் அவரது நடைப்பயணம் 6ம்தேதி மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அண்மையில் தெரிவிக்கப்பட்டது.



இதனால் அண்ணாமலையின் நடை பயணம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன் ஆலோசனைப்படி தெற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் செல்வகுமார், ஆலந்துறை மண்டல தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலையில் பாஜக தொண்டர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டும் கோவில் வளாகத்திற்குள் அங்க பிரதோஷணம் செய்தும் வேண்டிக்கொண்டனர். பின்னர் அண்ணாமலை விரைவில் குணமடைந்து வர வேண்டிய சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...