குண்டடத்தில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி - எதுவும் சிக்காததால் திருடர்கள் ஏமாற்றம்

குண்டடம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருடச் சென்ற மர்ம நபர்கள் வீடுகளில் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


திருப்பூர்: ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட முயன்ற மர்ம நபர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டடத்தை அடுத்துள்ள சூரியநல்லூர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 75), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தோட்டத்திற்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. உள்ளே பணம், நகை ஏதும் வைக்கப்படாததால் ஏமாற்றத்துடன் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றிருந்தனர்.

இதே போல் சின்னாரிபாளையம் வேலுசாமி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அங்கும் ஏதும் கிடைக்காத நிலையில் உப்பாறு அணை சுண்டமந்தை அருகில் உள்ள நடராஜ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவின் பூட்டையும் உடைத்து அதிலிருந்த துணிமணிகளை எடுத்து வீட்டின் உள் பகுதியில் வீசியிருந்தனர். அங்கும் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.

இது பற்றிய தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...