தாராபுரம் குண்டடத்தில் போலி மருத்துவர் கைது - மருத்துவமனைக்கு சீல் வைத்த போலீசார்

தாராபுரம் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக போலி மருத்துவராக சிகிச்சை அளித்து வந்த நபர் கைது செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே போலி மருத்துவமனை நடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாசர்பட்டி பகுதியில் தாராபுரம் பொட்டிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் சுமார் 10 ஆண்டுகளாக DDS என்கின்ற பெயரில் மருத்துவமனை அமைத்து மருத்துவம் பார்த்து வந்தார்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தாசர்பட்டி, பொன்னாபுரம் , நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவராக பணியாற்றி.

இந்நிலையில் இன்று தாராபுரம் அருகே உள்ள குண்டடம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாசர்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது தங்கராஜ் மருத்துவம் படிக்காமல் அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.



இந்நிலையில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் மருத்துவமனை அமைத்து மருத்துவராக பணியாற்றி வருவதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் குண்டடம் போலீசார் தங்கராஜை கைது செய்தனர்.



தங்கராஜ் பொதுமக்களுக்கு பயன்படுத்திய மாத்திரைகள் மற்றும் ஊசி உபகரணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



போலி மருத்துவமனைக்கு சீல் வைத்து போலிசார், அவர் பயன்படுத்திய மாத்திரைகள் மற்றும் மருந்துகளை அப்புறப்படுத்தனர்.



தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் மருத்துவ துறையினர் மேற்கொண்ட ஆய்வில் கைது செய்யப்படும் இரண்டாவது போலி மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தாசர்பட்டி, பொன்னாபுரம் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...