குண்டடத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - குண்டடம் கோல்டு ஸ்டார் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது

குண்டடத்தில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.


திருப்பூர்: கிரிக்கெட் போட்டியில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணியினர் முதல் பரிசை வென்றனர். 2-ம் பரிசை தாராபுரம் சகாரா அணியினர் பெற்றனர். 3-வது பரிசை பல்லடம் மான்ஸ்டர் அணியினரும், 4-வது இடத்தை தாராபுரம் பிரண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.

குண்டடத்தில் திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. குண்டடம் கோல்டு ஸ்டார் கிரிக்–கெட் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தாராபுரம், பல்லடம், திருப்பூர், உடுமலை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் அ.தி.மு.க. மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் முத்து வெங்கடேஸ்வரனும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமாரும், 3-ம் பரிசாக ரூ.7 ஆயிரம் பேரூராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜூம், 4-ம் பரிசாக ரூ.5ஆயிரம் குண்டடம் தொழிலதிபர் சத்தியசீலன் மற்றும் கோப்பைகளை குண்டடம் மணி, வெங்கி ஆகியோர் வழங்கினர்.

இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் குண்டடம் கோல்டு ஸ்டார் அணியினர் முதல் பரிசை வென்றனர். 2-ம் பரிசை தாராபுரம் சகாரா அணியினர் பெற்றனர். 3-வது பரிசை பல்லடம் மான்ஸ்டர் அணியினரும், 4-வது இடத்தை தாராபுரம் பிரண்ட்ஸ் அணியினரும் பெற்றனர்.



அதற்கான பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையை பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் ருத்ரகுமார் வழங்கினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...