ஆம்னி வேனில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - தாராபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வேனில் குட்கா கடத்தி நபரை கைது செய்து 48 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் ஆம்னி வேனில் கடத்தி வந்த குட்கா பொருள்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் தாராபுரம் சாலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான 5-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது ஆம்னி வேன் ஒன்று தாராபுரம் நோக்கி மிக வேகமாக வந்தது.

அதனை கண்ட போலீசார் தடுத்து நிறுத்தி வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் பண்டல், பண்டலாக கட்டுகள் இருந்து தெரியவந்தது.

வாகன ஓட்டுனரிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறிய டிரைவர் மீது சந்தேகம் ஏற்பட்டு வாகனத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.



அப்போது தாராபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விற்பனைக்காக குட்கா பொருடகளை கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டார்.



விசாரணையில் தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியைச் சேர்ந்த அண்ணாசாமி மகன் செல்லப்பாண்டி (24) என தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிந்து 48-கிலோ குட்கா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த பின்னர் செல்லப்பாண்டியை போலீசார் உடுமலைப்பேட்டை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...