கே.எம்.சி.எச் மருத்துவமனையில் முளைச்சாவடைந்த ஹோட்டல் உரிமையாளர் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா கோவிந்த நாய்க்கன்பாளையத்தை சேர்ந்த திரு.தாமோதரன் (வயது 40 ) இவர் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் நடத்திவருகிறார். இவர் கடந்த 13-ஆம் தேதி அதிகாலையில் 12.15 மணிக்கு ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திரு.தாமோதரன் அவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக ஈரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. .பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.   

இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு எற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது உறவினர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா கோவிந்த நாய்க்கன்பாளையம் குளுர் கிராமத்தை சேர்ந்த திரு.செந்தில்குமார் அவர்கள்  திரு.தாமோதரன்  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது இதயம், கண்கள், கல்லீரல், தோல்ம ற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும்,, கண்கள் அரவிந்த்ம ருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்  வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் நல்ல G பழனிசாமி  கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய திரு.தாமோதரன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்  கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...