மகளிர் உரிமை திட்டம் ஏமாற்றும் திட்டம் - உடுமலையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தற்பொழுது மக்களை ஏமாற்றும் விதமாக மகளிர் உரிமை திட்டம் துவங்கப்பட்டுள்ளது என உடுமலையில் மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தில் அண்ணாமலை புகார் தெரிவித்தார்.



திருப்பூர்: மதுபான கடையை நம்பி ஆட்சி செய்யும் அரசு ஒரே அரசு திமுக அரசு தான் என பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசின் மகளிர் உரிமை திட்டம் ஏமாற்றும் திட்டம் என உடுமலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் என் மண் என் மக்கள் யாத்திரை ராஜகாளியம்மன் கோவில் பகுதிகளில் துவங்கி உடுமலை நகரில் முக்கிய வீதிகள் ஆன பழைய பஸ் நிலையம், பெரிய கடை வீதி, தளி ரோடு வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,




காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா மிகவும் பின்தங்கி காணப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா அசுர வளர்ச்சி பெற்று உள்ளது.

குறிப்பாக அண்மையில் நடைபெற்ற பன்னாட்டு தலைவர்கள் ஒருங்கிணைந்து ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதை கூறலாம். தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குடும்ப ஆட்சி என கூறலாம். தமிழக முதல்வர் அப்பா , மகன் அமைச்சர் ,தங்கை எம் பி மற்றும் உறவினர்களுக்கு முக்கிய பதவிகள் என குடும்பத்தினர் மட்டும் ஆட்சி செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தற்பொழுது மக்களை ஏமாற்றும் விதமாக மகளிர் உரிமை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஆறு மாதம் மட்டும் செயல்படுத்தும் திட்டமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தற்பொழுது தமிழகம் உள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக பல்லடத்தில் ஒரே இரவில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் அரசு மதுபான கடையை நம்பி ஆட்சி செய்யும் அரசு ஒரே அரசு திமுக அரசு தான்.



மேலும் முன்னாள் அமைச்சர் காமராஜர் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணை கட்டிய நிலையில் தற்போது உள்ள திமுக அரசு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது. உடுமலையில் கஞ்சா விற்பனை இரவு பகலாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபான விடுதிகள் செயல்பட்டு வருவதால் குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் காணப்படுகின்றது.

இவற்றை தடுக்க வேண்டும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைக்க உரிய நிதி ஒதுக்க வேண்டும். உடுமலை அருகே வனப்பகுதி ஒட்டிய கிராமங்களில் வனவிலங்குகளின் தொந்தரவு அதிகமாக காணப்படுகிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் வனத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை உட்பட பல்வேறு கருத்துகளை பேசினார்.

கோவை மாவட்ட கோட்ட பொறுப்பாளர் முருகானந்தம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் மற்றும் மாநில, மாவட்ட சாரப்பு அணி நிர்வாகிகள் உட்பட 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...