உலக அல்சைமா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாக்கத்தான் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

உலக அல்சைமா நோய் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் இன்று நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் செவிலியர் மாணவ, மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் வாக்கத்தானில் பங்கேற்றனர்.


கோவை: உலக அல்சைமா நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



உலக அல்சைமா நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் இன்று நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் செவிலியர் மாணவ,மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் வாக்கத்தானில் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



வாக்கத்தான் நிகழ்ச்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



அல்சைமா நோய் குறித்து செவிலியர் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி ரேஸ் கோர்ஸ் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டனர்.

அல்சைமா நோய் நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் நோயாகும்.நாட்கள் செல்ல செல்ல மறதி அதிகரித்து பாதிப்பு உண்டாக்கும். தற்போது இருக்கக்கூடிய இளைஞர்கள், முதியோர்கள் இந்த அல்சைமா நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இதனை ஆரம்ப காலகட்டத்தில் சரி செய்வதற்காக இன்று உலக அல்சைமா தினத்தையொட்டி இந்த வாக்கத்தான் நிகழ்வானது நடைபெற்றது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...